அன்பு குழந்தைகளே, எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு உதவ என்னை அனுப்பியுள்ளார். கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருங்கள், உங்களை நேசிக்கும் மற்றும் உங்கள் பெயரால் உங்களை அறிந்திருக்கும் அவரிடம் நான் உங்களை வழிநடத்துவேன். மனிதக் கண்கள் இதுவரை காணாதவற்றை என் ஆண்டவர் உங்களுக்காகச் சேமித்து வைத்துள்ளார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மறக்காதீர்கள்: உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டுள்ளன. உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி, உலகத்திலிருந்து விலகித் திரும்புங்கள். முதலில் கடவுளின் பொக்கிஷங்களைத் தேடுங்கள், ஏனெனில் இந்த வாழ்க்கையில் உள்ள அனைத்தும் மறைந்துவிடும், ஆனால் நீதிமான்களுக்காக ஆண்டவர் சேமித்து வைத்திருப்பவை நித்தியமானவை.
நீங்கள் மிகுந்த உபத்திரவ காலத்தில வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள், மேலும் நீங்கள் திரும்புவதற்கான தருணம் வந்துவிட்டது. நீங்கள் பலவீனமாக உணரும்போது, ஒப்புரவு அருட்சாதனத்திலும் மற்றும் நற்கருணையிலும் வலிமையைத் தேடுங்கள். மனமுடைந்து விடாதீர்கள். உங்கள் கைகளை என்னிடம் கொடுங்கள், நான் உங்களை பரலோகத்திற்கு வழிநடத்துவேன். மனிதகுலம் இன்னும் மிகுந்த துன்பத்தின் தருணங்களை அனுபவிக்கும், ஆனால் நான் உங்கள் தாய், நான் உங்கள் பக்கத்தில் இருப்பேன். நான் சொல்வதைக் கேளுங்கள். இந்தத் தருணத்தில், பரலோகத்திலிருந்து உங்கள் மீது ஒரு அசாதாரண அருட்கடலையே நான் பொழிந்து கொண்டிருக்கிறேன். பயமின்றி முன்னேறிச் செல்லுங்கள்!
மிகவும் தூய மூவொரு கடவுளின் பெயரால் இன்று நான் உங்களுக்குத் தரும் செய்தி இதுவாகும். உங்களை மீண்டும் இங்கே ஒன்றிணைக்க எனக்கு அனுமதித்தமைக்கு நன்றி. பிதா, மகன் மற்றும் தூய ஆவியின் பெயரால் உங்களை ஆசீர்வதிக்கிறேன். ஆமென். அமைதியுடன் இருங்கள்.
ஆதாரம்: ➥ ApelosUrgentes.com.br